MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.

சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார்.

இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூர் இல் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்று வருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது.

KARTHIKAI DEEPAM HISTORY IN TAMIL | கார்த்திகை தீபம் வரலாறு

இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது.

உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

இலக்கியங்களில் நெடுங்காலமாக பேசப்படுகின்ற ஊர் என்பதாலும், இங்கு அரசாளும் மீனாட்சி தாய்வழிச்சமூகத்தின் எச்சப்பாடாக இருப்பதாலும் மதுரைக்கு அப்படியொரு சிறப்பு. மேலும், ஒரு பெண்தெய்வம் தனியாக முடிசூடி திக்விஜயம் செய்யும் வழக்கம் வேறெந்த ஊரிலும் இல்லை.

அதேபோல, அவளுடைய பெயரை சாதி வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் சூட்டிக்கொள்கிறார்கள். இந்தச் சிறப்பும் வேறெந்த தெய்வத்திற்கும் கிடையாது.

எனவே, பெண்ணின் தனித்த உரிமையை பேணி காக்கும் சடங்குகளும், திருவிழாக்களும் உணர்வு மாறாமல் தகித்துக் கொண்டிருப்பதால் பண்பாட்டின் விழுமியங்களில் மதுரைக்கு எப்போதும் தனிப்பெருமை உண்டு என்கிறார் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன்.

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு – “திருவிழாக்களின் திருவிழா” என்றதொரு மங்காத புகழ்மொழியுண்டு.

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் (பெரும்பாலும் தென் மாவட்டங்களில் இருந்து) சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரைக்கு வந்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா
MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL – அழகரின் மதுரை பயண நோக்கம்

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வண்டியூர் அருகில் உள்ள தேனூர் மண்டபத்திற்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கும் வருவது தான் அழகரின் மதுரை பயணத்தின் நோக்கம் என கோயில் திருவிழா அழைப்பிதழ் கூறுகிறது.

மீனாட்சி கல்யாணத்திற்கும் அழகர் வருகைக்கும் உள்ள தொடர்பு

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: பாண்டிய நாட்டில் சைவ – வைணவ எதிர்ப்பு போராட்டம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. எனவே, சைவ – வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவே இரு விழாக்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, அறுவடை முடியாத நிலையில் வேளாண்மை பெருமக்களால் காணமுடியாமல் இருந்ததால் அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா தேரோட்டம் மாசி வீதியில் நடப்பது இதற்கான சான்று.

சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் எனும் இடத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த அழகர் ஊர்வலம், திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி மாற்றப்பட்டுள்ளது.

வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் (நாரைக்கு முக்தி) கொடுக்க அழகர் செல்லும் மண்டபத்தின் பெயர் ‘தேனூர் மண்டபம்’.

TAMIL NEW YEAR HISTORY IN TAMIL | TAMIL PUTHANDU WISHES | தமிழ்ப் புத்தாண்டு வரலாறு

தேனூரை சேர்ந்தவர்களே இங்கு கோயில் மரியாதை பெறுகின்றனர் என்பதும் அதற்கான சான்றாக அமைந்துள்ளது.இந்த இரண்டு விழாக்களையும் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1623 – 1659) தான் இணைத்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமைத்த தேர்களை இழுக்க ஆட்களை சேர்க்கவும், கால்நடை சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் திருமலை நாயக்கர் இதை செய்துள்ளார்.

திருவிழாக்களை மாற்றக்கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டவும் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அழகர் ஊர்வலத்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்களை எடுத்து வரும் வண்டிகளும், உண்டியல்களை ஏந்திய வண்டிகளும் வரும். அதனையே தங்கை மீனாட்சிக்கு அண்ணன் அழகர் திருமண சீர் கொண்டு வருவதாகவும் நம்பி மக்கள் தங்கள் கதைக்குள் சேர்த்துள்ளனர். மற்றபடி அழகர் ஊர்வலத்திற்கும் மீனாட்சி கல்யாணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா
MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா

அழகர் – கள்ளழகராக மாறுவதன் காரணம்

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: திருமலை நாயக்கர் காலத்திற்கு பின்னர் மதுரையை ஆண்ட விஜயரங்கசொக்கநாதன் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1706 – 1717) ஊருக்குள் புகுந்து தாக்கும் அளவிற்கும், அழகர் கோவில் பகுதியில் உழவுத்தொழில் நடத்த இயலாமல் தொல்லை தருமளவும் கள்ளர் சாதியினர் வலிமை பெற்றிருந்துள்ளனர்.

அந்த காலகட்டத்தில் அழகர் ஊர்வலத்தை ஒருமுறை கள்ளர்கள் மறித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த சமூகத்தினருக்கு ‘இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை’ தருவதற்கு கோவில் உடன்பட்டிருக்கிறது.

மேலும், கோவில் சொத்துடைமை நிறுவனமாக இருந்ததால் அதனை காத்துக் கொள்வதற்கும், கள்ளர்களோடு உறவு கொண்டு அதற்கு ஆன்மீக வண்ணமும் தரப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பும் அழகர், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், ‘காங்கு’ எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளர் தோற்றத்தில் வருகிறார்.

தல்லாகுளத்தில் கள்ளழகர் – அழகராக மாறுவதன் காரணம்

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: அழகர் ஊர்வலம் மதுரையை சேர்ந்த உயர்சாதியினரால் (சைவர்களால்) தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக்கலாம். பிராமண பூசைபெறும் பெருந்தெய்வமான அழகர், கள்ளர்களை போல வேடமணிந்து வந்தது இதற்கு வலுவான காரணமாகயிருக்கலாம்.

மோதலுக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் அழகர் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு, வைகையாற்று பகுதியிலும், வண்டியூரிலும் கள்ளர் வேடம் தடை செய்யப்பட்டிருக்கலாம்.

“அழகரின் ஊர்வலம் தல்லாகுளம் பகுதிக்கு வரும்போது ஒருமுறை பாண்டிமுனி அதனை மறித்துக் கொண்டதாகவும், உடனே அழகர் அவரது காவலாளியான பதினெட்டாம்படி கருப்பனை நினைத்ததாகவும், கருப்பன் வந்து பாண்டிமுனியை விரட்டிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும்” என தல்லாகுளத்தில் கருப்பசாமி கோவில் ஏற்பட்டதற்கு ஒரு கதையும் வழக்கில் இருக்கிறது

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா
MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா

மதுரை நகருக்குள் அழகர் வராததன் காரணம்

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: “மதுரை தங்கச்சி பூமி; அழகருக்கு அக்கரையும் மீனாட்சிக்கு இக்கரையும் தீந்திட்டு; அழகருக்கு எல்லை அவ்வளவு தான்” எனும் புழங்குமொழிகள் அழகருக்கும் மீனாட்சிக்கும் எல்லைகள் வரையறுக்கப்பட்டன என்பதை உணர்த்துகின்றன.

அழகருக்கு வைகையாற்றின் தென்கரையில் நகர்ப்பகுதிக்குள் ஒரே ஒரு திருக்கண் உண்டு. யானைக்கல் பகுதியில் திருமலைராயர் படித்துறையை அடுத்து (கல்பனா திரையரங்கம் இருந்தவிடம்) ஐயங்கார் தோப்பு மண்டகப்படி எனும் திருக்கண் உண்டு.

இந்த மண்டகப்படிக்கு அழகர் பல்லக்கு வருவதில்லை. மாறாக, வைகையின் வடகரையில் ஒரு மண்டகப்படியில் அழகரின் பல்லக்கு இருக்க, அழகரின் திருவடியாக கருதப்படும் சடாரியை மட்டும் ஒரு சிறிய பல்லக்கில் எடுத்து வந்து பூசை செய்து திரும்பவும் கொண்டு செல்கின்றனர்.

அழகர் வர முடியாத காரணத்தால் தான் அவரது திருவடியை மட்டும் அங்கு எடுத்து செல்கிறார்களோ என்ற எண்ணம் அழகரின் வருகை நகருக்குள் தடுக்கப்பட்டதை உறுதி செய்கிறது.

அப்படியெனில், அழகர் கள்ளர் வேடம் ஏற்க துவங்கும் முன்னர் நகருக்குள் வந்திருப்பாரா? எனும் கேள்விக்கும் ஒரு சான்று இருக்கிறது.

மதுரை அரசரடி – ஆரப்பாளையம் பகுதியில் ‘அழகரடி’ எனும் பகுதி இருக்கிறது. அங்கு அழகரின் இரு பாதங்கள் கல்லில் செதுக்கப்பட்டு, அது ஒரு சிறிய கோவிலாக மாற்றப்பட்டு மக்களால் அழகரடி என அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் அழகர் வந்து இங்கு தங்கியதாக ஒரு வழக்குமரபும் இப்பகுதி மக்களிடத்தே நிலவுவதாலும், ‘அடி’ எனும் சொல் இடத்தை குறிப்பதாலும் இப்பகுதி அழகரடி என குறிப்பிடப்படுகிறது.

எனவே, கிராமப்புற தாழ்த்தப்பட்ட சாதியினரான அழகரின் அடியவர்களுக்கும், மதுரை நகரத்து உயர்சாதியினராக கூறப்பட்ட சைவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் காரணமாகவே அழகர் மதுரை நகருக்குள் வருவதில்லை.

சித்திரைத்திருவிழா அளிக்கும் அடிப்படை புரிதல்

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL: மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா மதுரை நகருக்குள், வைகை நதிக்கு தென்புறத்திலேயே முடிந்து விடுகின்றன. அழகர் திருவிழா வைகை நதி படுகையிலும், நதிக்கு வடகரையிலுமே நடைபெறுகின்றன.

மீனாட்சி திருவிழாவில் நகர மக்கள் பெரும்பகுதியினரும், அழகர் விழாவில் நாட்டுப்புற மக்கள் பெருமளவிலும் பங்கேற்கின்றனர். முன்னது நகரமக்களின் விழா; பின்னது நாட்டுப்புற மக்களின் விழா.அழகர் விழாவில் பங்குபெறும் மக்களிடம் பக்தி உணர்வுடன் சுற்றுலா உணர்வும் நிறைந்து காணப்படுகிறது.

எளிமையினையும், ஏழ்மையினையும் வெளிக்காட்டும் வாழ்க்கை இவர்களிடம் தெரிகிறது. இவ்வகையான மக்களே சித்திரைத் திருவிழாவுக்கு உயிர்ப்பூட்டுகிறார்கள். திருவிழா கூட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்!

MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா
MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா 2024 தேதிகள்

11 ஏப்ரல், 2024 – வியாழன் – வாஸ்து சாந்தி

12 ஏப்ரல் 2024 – வெள்ளிக்கிழமை

  • காலை – சித்திரை திருவிழா கொடியேற்றம் (கொடியேற்றம்) – கொடியேற்றம் நேரம்: லக்னம் – (விரைவில் புதுப்பிக்கப்படும்)
  • இரவு – 7 மணி முதல் 10.30 மணி வரை – கற்பக விருட்சம், சிம்ம வாகனம்

13 ஏப்ரல் 2024 – சனிக்கிழமை

  • காலை – 7 முதல் 9.30 வரை – தங்க சப்பரம்
  • இரவு – 7 மணி முதல் 10.30 மணி வரை – பூத, அன்ன வாகனம்

14 ஏப்ரல் 2024 – ஞாயிறு

  • காலை – 7 முதல் 9.30 வரை – தங்க சப்பரம்
  • இரவு – 7 மணி முதல் 10.30 மணி வரை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்

15 ஏப்ரல் 2024 – திங்கள்

  • காலை – 9 மணி – தங்க பல்லக்கு
  • இரவு – மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை – தங்க பல்லக்கு

16 ஏப்ரல் 2024 – செவ்வாய்

  • காலை – 9 மணி – தங்க சப்பரம்
  • இரவு – 7 மணி முதல் 9.30 மணி வரை – வேடர் பரி லீலை – தங்க குதிரை வாகனம்

17 ஏப்ரல் 2024 – புதன்

  • காலை – 7.30 முதல் 10.30 வரை – தங்க சப்பரம்
  • இரவு – 7.30 மணி முதல் 11.00 மணி வரை – சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை – ரிஷப வாகனம் (தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபம்)

18 ஏப்ரல் 2024 – வியாழன்

  • காலை – 8 முதல் 10.30 வரை – தங்க சப்பரம்
  • இரவு – 7 மணி முதல் 10.30 மணி வரை – நந்தீகேஸ்வரர், யாழி வாகனம்

19 ஏப்ரல் 2024 – வெள்ளிக்கிழமை

  • காலை – 10 மணி – தங்க பல்லக்கு
  • மாலை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – (பட்டாபிஷேக நேரம்: லக்னம் – விரைவில் புதுப்பிக்கப்படும் – பெரும்பாலும் மாலை 7 மணியளவில் IST)
  • இரவு – 9 மணி முதல் 11 மணி வரை – வெள்ளி சிம்ஹாசன உலா

20 ஏப்ரல் 2024 – சனிக்கிழமை

  • காலை -: 7 முதல் 9.30 வரை – மரவர்ண சப்பரம்
  • மாலை / இரவு – மாலை 6 மணி முதல் 11.30 மணி வரை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா

21 ஏப்ரல் 2024 – ஞாயிறு

  • காலை – 4 மணி – வெள்ளி சிம்ஹாசனம்
  • காலை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் (விண்மீன் திருமணம்) – (திருக்கல்யாண நேரம்: லக்னம் – விரைவில் புதுப்பிக்கப்படும்)
  • இரவு – 7.30 முதல் 11.30 வரை – தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லக்கு

22 ஏப்ரல் 2024 – திங்கள் – திரு தேர் – தேரோட்டம் (ரத உற்சவம், தேர், தேர் திருவிழா)

  • இரவு – 7 மணி முதல் 10.30 மணி வரை – சப்தாவர்ண சாப்ரம்

23 ஏப்ரல் 2024 – செவ்வாய் – தீர்த்தம்,

  • இரவு: 7 மணி முதல் 10 மணி வரை – வெள்ளி ரிஷபம் சேவை
MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா
MADURAI CHITHIRAI FESTIVAL HISTORY IN TAMIL | மதுரை சித்திரை திருவிழா
கள்ளழகர் (கள்ளழகர்)

21 ஏப்ரல் 2024 – ஞாயிறு

  • இரவு – அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள், கலழகர் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில் மதுரை எழுந்தருளல்

22 ஏப்ரல் 2024 – திங்கள் – எதிர் சேவை

  • இரவு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கொடுத்த மாலை சூடு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில்

23 ஏப்ரல் 2024 – செவ்வாய்

  • ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் – (1000 பொன்சபரம் தேர் – தங்க குதிரை வாகனம் – ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுத்தல்)
  • வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோவில் இரவு சைத்யோபச்சாரம்

24 ஏப்ரல் 2024 – புதன்கிழமை

  • காலை – காலையில் சேஷ வாகனம் (வண்டியூர் தேனூர் மண்டபத்தில் இருந்து புறப்படுதல்)
  • பிற்பகல் – மதியம் கருட வாகனம் – மண்டூக மகரிஷிக்கு மோக்ஷம்
  • நள்ளிரவு – இரவில் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி

25 ஏப்ரல் 2024 – வியாழன்

  • காலை – மோகனாவதாரம் (மோகினி அவதாரம்)
  • பிற்பகல் – ராஜாங்க அலங்காரம் (அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபம் புறப்படுதல்) – மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்
  • இரவு – சேதுபதி மண்டபம் பூ பல்லக்கு அலங்காரம்

26 ஏப்ரல் 2024 – வெள்ளிக்கிழமை

  • அதிகாலை – பூ பல்லக்கு எழுந்தருளல் (சேதுபதி மண்டபம் )

27 ஏப்ரல், 2024 – சனிக்கிழமை

  • அதிகாலை – அப்பன் திருப்பதியில் ஸ்ரீ கால் அழகர் எழுந்தருளல்
  • காலை – ஸ்ரீ காலழகர் அழகர் மாலை வந்து சேர்தல்

Leave a Comment